ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கச் சென்றவர்களுக்கு வழங்கப்பட்ட சலுககைகள்: அதிர்ச்சித் தகவல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 1200 க்கும் மேற்பட்ட மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தயாசிறி ஜயசேகர இவ்வாறு தெரிவித்தார் .மூன்று இலட்சம் ரூபாவுக்கு மேல் துப்பாக்கிகளை கொள்வனவு செய்வதற்கு துப்பாக்கி அனுமதிப்பத்திரம் மேலும் போராட்டத்தின் போது வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு மூன்று முதல் நான்கு கோடி ரூபா வரை கொடுப்பனவு  வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை நெற்றியில் வைத்து அறைந்தவர்களே இன்று ஜனாதிபதியுடன் உள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள்  என்றும் ஜயசேகர மேலும் தெரிவித்தார் .