கேரளா – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 தமிழர்கள் பலி

வயநாடு நிலச்சரிவு நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்பொழுது,  நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 277-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த  உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில், தமிழர்களும் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தமிழர்கள் வயநாட்டில் தேயிலை தோட்டம், வாகனம் ஓட்டுதல் மற்றும் பல வேலைகளுக்காக அங்கு தங்கிருந்து வாழ்கின்றனர். இந்த நிலையில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்கள் புலம்பெயர்ந்து முண்டக்கையில் வசித்து வந்தனர். 11 தமிழர்கள் அங்கு வசித்து வந்த நிலையில், 9 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளாக அவர்கள் அங்கு வசித்து வரும் நிலையில், இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. ராணுவம் மற்றும் விமானப்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.