ஆன்லைன் கேம் விளையாட்டில் ஈடுபட்ட 16 வயது சிறுவன் தற்கொலை: லாக் அவுட் என எழுதியுள்ளார்

புனே அருகே உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் நகரில் 16 வயது சிறுவன் ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் 14வது மாடியில் இருந்து குதித்து இறந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது. அவரது புத்தகத்தில் ‘லாக் அவுட்’ செய்தி மீட்கப்பட்டதன் மூலம் ஆன்லைன் கேமில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

சிறுவன் தனது பெற்றோரின் கூற்றுப்படி ஆன்லைன் கேம் விளையாடுவதற்கு அடிமையாக இருந்தான் என்று துணை போலீஸ் கமிஷனர் ஸ்வப்னா கோர் தெரிவித்தார்.அவரது குறிப்பேட்டில் இருந்து ‘லாக் அவுட்’ என்று குறிப்பிடப்பட்ட தற்கொலைக் குறிப்பை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். மேலும் அவர் ‘எக்ஸ்டி என்று எழுதியுள்ளார்.

இது அவர் விளையாடும் ஆன்லைன் கேமாக இருக்கலாம். தற்கொலைக்கான காரணத்தை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம், என்று போலீஸ் அதிகாரி தெரிவித்தார். அவரது லேப்டாப்பை பறிமுதல் செய்த போலீசார், சோதனைக்காக சைபர் நிபுணர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.