தேர்தலில் பொது வேட்பாளரை முன்னிறுத்துவது வீண் செயல்:  எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை முன்னிறுத்துவது வீண் செயல் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இப்போதும் கூட வடக்கில் உள்ள தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து பொது வேட்பாளரை கொண்டு வருவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்மானம் தமிழ் மக்களை மீண்டும் ஏமாற்றும் முடிவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் மக்கள் கூட்டாணி கட்சியின் தலைவர்சி.வி.விக்னேஸ்வரன் ஆட்சிக்கு வர முயற்சிக்கிறார்.ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து தமது கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை.பிரதான வேட்பாளர்கள் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை முன்வைத்தவுடன் அது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.