முற்றாக எரிந்த ஹெலியின் சிதைவு கண்டுபிடிப்பு! அதிபர் உட்பட அனைவரும் உயிரிழந்தனர்!!

தேசிய துக்கம் அறிவிக்க தயாராகிறது தெஹ்ரான்

Kumarathasan Karthigesu-பாரிஸ்

ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரய்சி பயணித்த ஹெலிக்கொப்ரர் முற்றாக எரிந்துசிதறிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்த எவருமே உயிர்பிழைத்திருப்பதற்கான தடயங்கள் ஏதுமில்லை என்று ஈரானிய அரச தொலைக்காட்சி அறிவித்திருக்கிறது.

ஈரானின் கிழக்கே அஜர்பைஜான் மாகாணத்தில் மலைப் பிரதேசத்தில் ஹெலிக்கொப்ரர் விபத்துக்குள்ளான பகுதியைப் பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் மீட்புக் குழுவினர் அடையாளம் கண்டுள்ளனர் என்று அறிவிக்கப்படுகிறது.
காடுகள் நிறைந்த மலைப்பகுதியில் ஹெலிக்கொப்ரர் எரிந்துகிடக்கும் தடயத்தைக் காட்டுகின்ற ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகி உள்ளன. வெப்பப் பொருள்களை அடையாளம் காணக்கூடிய துருக்கி நாட்டின் விசேட தேடுதல் ட்ரோன் மூலமே ஹெலியின் சிதைவுப் பகுதி அடையாளங்காணப்பட்டிருக்கிறது.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">