ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு எம்.ஏ.சுமந்திரனை நான் கேட்கவில்லை:  சுரேஷ் பிரேமச்சந்திரன்.

ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு எம்.ஏ.சுமந்திரனை நான் கேட்கவில்லை. இது வெறும் அப்பட்டமான பொய். அது அவரது அதீதமான கற்பனையின் வெளிப்பாடு’ என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கோப்பாயில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்  ஊடகங்களில் ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. சுமந்திரனிடம் ஜனாதிபதி தமிழ் மொது வேட்ப்பாளராக போட்டியிடுமாறு யாராவது உங்களிடம் கோரினார்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் கூறியிருக்கின்றார். அதில், உத்தியோகபூர்வமாக யாரும் தன்னிடம் கேட்க்கவில்லை. இருந்த போதும், சுரேஷ் பிரேமச்சந்திரன் தன்னைச்சந்தித்து நீங்கள் நிற்பீர்களா என்று என்னிடம் கேட்டார் எனவும் தான் அதை மறுத்தார் எனவும் அவர் சொல்லியிருக்கின்றார்.

அது ஒரு உண்மையான விடயம் அல்ல. ஒரு சில மாதங்களுக்கு முன்பாக ஒரு பொது வேட்ப்பாளர் தொடர்பாக கருத்தை அவரிடம் கேட்டிருந்தேன் என்பது உண்மை. பொது வேட்பாளரது தேவையைப் பற்றி நான் கூறியிருந்தது மாத்திரமல்ல அவரது கருத்தையும் நான் கேட்டருந்தேன் என்பது உண்மை. அந்த வேளையில், யார் வேட்பாளர் என்பது பற்றி நாங்கள் யோசிக்கவேயில்லை. அவ்வாறான வேளையில் நான் அவரைப் போய் பொது வேட்ப்பாளராக நில்லுங்கள் என்று நான் கேட்டேன் என அவர் கூறியிருப்பது, ஓர் அதீதமான கற்பனையின் வெளிப்பாடோ என்பது எனக்குத் தெரியவில்லை எனத் தெரிவித்தார் எம்மைப் பெறுத்த வரையில் ஆரம்பத்தில் இருந்து ஒரு பொது வேட்ப்பாளர் என்பவர் கட்சி சாராதவராக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் மிகத் தெளிவாக இருக்கின்றோம்.

அந்த அடிப்படையில் பார்த்தால் கூட அவ்வாறான ஒரு கோரிக்கையை சுமந்திரனிடம் நான் வைக்கத் தேவையில்லை. ஆகவே அவ் விடயத்தில் அவர் ஒரு தவறான, பிழையான கருத்தைக் கூறியிருக்கிறார் என்பதை நான் வெட்ட வெளியில் மக்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்’ என்று சுரேஷ் மேலும் தெரிவித்தாா்.