யாழ்ப்பாணம்  தென்னிய கலைஞர்  இசை நிகழ்ச்சி சர்ச்சை: வருவாய் முழுவதையும் மீளளிப்பதற்கு முடிவு செய்துள்ளதாக அறிக்கை

 

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் கடந்த பிப்ரவரி 9ஆம் திகதி மிகவும் பிரம்மாண்டமாக பின்னணி பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் ஹரிஹரன், தமன்னா, கலாமாஸ்ரர்   டிடி,  பாலா, பின்னணி பாடகி ஸ்வேதா மோகன், புகழ் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் மக்கள் வந்ததுள்ளதாக கூறப்படுகின்றது. இதில் விசமிகள் கூட்டத்திற்குள் புகுந்து  தடங்கலை ஏற்படுத்தியதாக  குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில்,  நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த நோதேன் யுனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதில் ‘இந்நிகழ்வில் ஏற்பட்ட சிறு தடங்கல் மற்றும் அசௌகரியம் காரணமாக, கிடைக்கப்பெற்ற வருவாய் முழுவதையும் மீளளிப்பதற்கு முடிவு செய்துள்ளோம் என்றும் தங்களால் செலுத்தப்பட்ட பணம் வறுமை கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களின் கல்விச் செயற்பாட்டுக்கு பயன்படுத்த எண்ணுவோர் அவ்வாறே விட்டு விட, பணத்தினை மீளப் பெற விரும்புபவர்கள் தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்தை 0777315262 தொடர்பு கொள்ளுங்கள்’ என்றும் தெரிவித்துள்ளனர்.