பண மோசடி புகாரில் லதா ரஜினிகாந்திற்கு முன்பிணை.

மோசடி புகாரில் லதா ரஜினிகாந்திற்கு பெங்களூரு நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்பிணை வழங்கியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2014ல் வெளியான திரைப்படம் ‘கோச்சடையான்’ .மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் தோல்வியடைந்தது.

இந்த திரைப்படத்தை தயாரிப்பதற்காக ஆட்-ப்யூரோ நிறுவனத்திடம் இருந்து மீடியா ஒன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம், ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தது.

அதற்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்து கையெழுத்திட்டார். இதன் பின்னர் ரூ. 6.2 கோடி பணம் திருப்பி தரப்பிடவில்லை என லதா ரஜினிகாந்த் மீது மோசடி புகார் கொடுக்கப்பட்டது.

அவர் மீது பெங்களூரு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது அதை ரத்து செய்யக் கோரி, லதா ரஜினிகாந்த் இன்று ஆஜரான நிலையில், நீதிமன்றம் நிபந்தனையுடன் முன்பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மேலும் வழக்கு விசாரணை ஜனவரி 6ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">