நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சுகாதார தொழிற்சங்க போராட்டம் – வைத்தியசாலை நடவடிக்கை ஸ்தம்பிதம்

செ.திவாகரன்

சுகாதார சேவை தொழிற்சங்கங்களின் கூட்டணியின் கீழ் சுகாதார சேவையில் ஈடுப்படும் 11 சங்கங்கள் இணைந்து “20,000/= வெற்றிக்கொள்ளும் ஒண்றிணைந்த தொடர் போராட்டத்தை வெற்றிப்பெறச் செய்வோம்” எனும் தொணியில் 09 பிரதான கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் புதன் கிழமை (01) இரண்டு வகை போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் வைத்தியசாலை நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டது.

அத்துடன் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு பிரவேசித்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து இருந்தனர் குறிப்பாக வெளிநோயாளர் பிரிவு மற்றும் மருந்து விநியோகப் பிரிவு என்பன காலை 7 மணி முதல் நண்பகல் 12 செயலிழந்து காணப்பட்டது . எனினும் நண்பகலுக்கு பிறகு மருந்து விநியோகிக்கப்படாமையால் மருந்துகளைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது

இந்த போராட்டத்தினால் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் சேவைகளுக்கு பெருமளவான வைத்தியசாலைகளில் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.