தாளையடி பகுதியில் சட்ட விரோத மண் அகழ்வு -அப்பகுதி மக்களால் முறியடிப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் உரிய அனுமதி இன்றி மண் அகழ்வு இடம்பெறுள்ளது. நான்கு டிப்பர் ரக வாகனத்தில் மண்ணை அகழ்ந்து சென்ற வேளையில் தாளையடி கிராம அபிவிருத்தி சபை மற்றும் கடற்றொழிலாளர் சங்க நிர்வாக சபை உறுப்பினர்களாலும்  தடுத்து நிறுத்தப்பட்டு மண் மூடைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு நடைபெறுள்ளது.

மேலும் இது தொடர்பாக அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கும் போது, தாளையடி பிரதேசத்தில் அண்மைகாலமாக இரவு வேளைகளில் ஏராளமான மண் அகழ்வு இடம்பெற்று வருவதாகவும் இது தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்தாலும் அவர்கள் எந்த நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என்றும் அவர்களும் சேர்ந்து தான் சட்டவிரோத செயலில் ஈடுபடுவதாவும் சந்தேகம் தெரிவித்துள்னர் . இந்த நிலை தொடருமானால் தாளையடி பிரதேசத்தில் உள்ள வளங்கள் அழியும் நிலை உருவாகும் என்று கவலை தெரிவித்துள்னர்.