பாஜக அரசு சொல்வதை எல்லாம் கேட்டு நடைமுறைப்படுத்துவது தான் திமுகவின் பாஜக எதிர்ப்பரசியலா? சீமான் சீற்றம்

மாநிலக் கல்விக் கொள்கையை காவிமயமாக்கும் திமுக அரசின் முயற்சி கண்டனத்துக்குரியது என்று சீமான் தனது ஆவேச அறிக்கையை வெளியிட்டுள்ளார்.ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை ஏற்க நினைக்கும் திமுக அரசின் கொள்கை நிலைப்பாடும் நிர்வாக செயல்பாடும் தமிழக மாணவர்களுக்கு மக்களுக்கு மட்டும் அல்ல அறிஞர் அண்ணாவுக்கு செய்யும் கொடும் துரோகம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசால் உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ அடியொற்றி  மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படுவதாக கூறி மாநில உயர்நிலைக் கல்விக் குழுவின் உறுப்பினரும் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் ஜவகர் நேசன் பதவி விலகி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

 தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என கூறிவிட்டு இப்போது அதனையே மாநில கல்விக் கொள்கையின் வாயிலாக அமுல்படுத்த துடிக்கும் திமுக அரசின் செயற்பாடு வெட்கக்கேடானது. தேசிய கல்விக் கொள்கையில் உள்ள நல்லவைகளை எடுத்துக் கொள்வோம் எனக்கூறி வந்த திமுக அரசு இப்போது மாநில கல்விக் கொள்கையை மொத்தமாக காவிமயமாக்கம் முயல்வது கடும் கண்டனத்துக்குரியது.

பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை ஒன்றிய பட்டியலில் இருப்பது போல கருதிக் கொண்டு ஒற்றைமயத்தையும் காவி கொள்கையையும் கொண்டு ஒன்றிய அரசால் எதேச்சாதிகாரப் போக்கோடு உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றம் எனக்கூறி மாநில கல்விக் கொள்கையை உருவாக்க கடந்த ஆண்டு ஜூன் 01 அன்று ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைத்தது திமுக அரசு. இந்நிலையில் அக்குழுவில் இருந்து பேராசிரியர் ஜவகர் நேசன் விலகி இருப்பதோடு தேசிய கல்விக் கல்விக் கொள்கைக்கு சாதகமாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்படுவதாகவும் அக்குழுவில் சுதந்திரமாக பணி செய்வதற்கு பெரும் இடையூறும் அதிகாரிகளின் மித மிஞ்சிய தலைகளும் இருப்பதாகவும் கூறியிருப்பதன் மூலம் வெளிவரவிற்கும் கல்விக் குழுவின் வரைவறிக்கை மீதான நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

மாநில தன்னாட்சி என வாய்கிழிய பேசும் திமுக அரசு மாநில அரசின் தன்னுரிமை காவுகொடுத்து ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த துணை போவது அப்பட்டமான ஆரிய அடிமைத்தனம் இல்லையா? சனாதனத்திற்கு எதிரானது திராவிடம் என முழங்கும் முதல்வர் ஸ்டாலின் கல்வியை காவிமயமாக்கக எப்படி துணை போகிறார்? இதுதான் எல்லோருக்குமான ஆட்சியா இதுதான் இருளகற்றும் விடியல் ஆட்சியா? இதுதான் உங்களது பாசிச எதிர்பா? இதுதான் ஆரியத்தை திராவிடம் எதிர்க்கும் லட்சணமா? பாஜக அரசு சொல்வதை எல்லாம் கேட்டு நடைமுறைப்படுத்துவது தான் திமுகவின் பாஜாக எதிர்ப்பரசியலா? ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை ஏற்க நினைக்கும் திமுக அரசின் கொள்கை நிலைப்பாடும் நிர்வாக செயல்பாடும் தமிழக மாணவர்களுக்கும் மக்களுக்கும் மட்டுமல்ல அறிஞர் அண்ணாவுக்கு செய்யும் கொடும் துரோகம்.

ஆகவே இவ்வகாரத்தில் தமிழ்நாட்டு அரசு இனியாவது தனது தவறை திருத்திக் கொண்டு நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு தேசிய கல்விக் கொள்கையை வாழ அம்சங்களையும் முற்றாக நிராகரித்து தனித்துவமிக்க மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாட்டு அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.