Hormuz நீரிணையில் அமெரிக்கா மற்றும் ஈரான் நேரடி மோதல்: Trump கடும் எச்சரிக்கை!
Meiveli Media Team

Hormuz நீரிணையில் அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் மீது முன்னெப்போதையும் விட மிகக் கடுமையான மற்றும் வன்முறையான தாக்குதல்களை நடத்த நேரிடும் என்று அமெரிக்க அதிபர் Donald Trump எச்சரித்துள்ளார்.அமெரிக்க கடற்படையின் மூன்று அதிநவீன போர் கப்பல்கள் Hormuz நீரிணை வழியாக சென்றபோது, ஈரான் அவற்றை நோக்கி ஏவுகணைகள் மற்றும் Droneகளை ஏவி தாக்குதல் நடத்தியது.இந்தத் தாக்குதலில் அமெரிக்கக் கப்பல்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், அமெரிக்காவின் பதில் தாக்குதலில் ஈரானின் Droneகள் மற்றும் பல சிறிய படகுகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டதாகவும் Trump தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது Truth சோஷியல் பக்கத்தில் கூறுகையில், மூன்று உலகத்தரம் வாய்ந்த அமெரிக்க போர் கப்பல்கள், தாக்குதலுக்கு உள்ளான நிலையிலும் Hormuz நீரிணையை விட்டு மிக வெற்றிகரமாக வெளியேறின. அந்த மூன்று கப்பல்களுக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை, ஆனால் ஈரான் தரப்பில் பெரும் சேதம் விளைவிக்கப்பட்டது. முழுமையாகச் சிதைக்கப்பட்ட அவர்களின் கடற்படைக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஏராளமான சிறிய படகுகளுடன் சேர்த்து அவர்களும் முற்றிலும் அழிக்கப்பட்டனர். அந்தப் படகுகள் மிக வேகமாக கடலில் மூழ்கடிக்கப்பட்டன.எங்கள் கப்பல்கள் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன, ஆனால் அவை மிக எளிதாக வீழ்த்தப்பட்டன. அதேபோல், ட்ரோன்களும் வந்தன, அவை காற்றில் இருக்கும்போதே எரிக்கப்பட்டன. ஒரு பட்டாம்பூச்சி அதன் கல்லறைக்குள் விழுவதைப் போலவே அவை மிக அழகாகப் பெருங்கடலில் விழுந்தன.
ஒரு சாதாரண நாடு இந்த போர்க் கப்பல்களைக் கடந்து செல்ல அனுமதித்திருக்கும், ஆனால் ஈரான் ஒரு சாதாரண நாடு அல்ல. அவர்கள் பைத்தியக்காரர்களால் வழிநடத்தப்படுகிறார்கள், அவர்களுக்கு அணு ஆயுதத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்தால், எந்தக் கேள்வியுமின்றி அதைச் செய்வார்கள்.ஆனால் அவர்களுக்கு அந்த வாய்ப்பு ஒருபோதும் கிடைக்காது. இன்று அவர்களை மீண்டும் வீழ்த்தியது போலவே, அவர்கள் விரைவில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், எதிர்காலத்தில் அவர்களை இன்னும் கடுமையாகவும், இன்னும் வன்முறையாகவும் வீழ்த்துவோம். எங்களது மூன்று கப்பல்களும், அவற்றின் அற்புதமான பணியாளர்களுடன் இப்போது எங்களது கடற்படை முற்றுகையில் மீண்டும் இணையும் என தெரிவித்துள்ளார்.

