பிரான்சில் தாயையும் மகளையும் கொன்ற நிரோசன்  என்பவருக்குஆயுள் தண்டனை

Meiveli Media Team


2021 ஆகஸ்ட் 10 அன்று Saint‑Ouen‑l’Aumône பகுதியில் 51 வயதுடைய விஜயசிறி மற்றும் 21 வயதுடைய அவரது மகள் ஷானா  ஆகியோரைக் கொன்ற குற்றச்சாட்டில், 30 வயதுடைய நிரோசன்  என்பவருக்குஆயுள் தண்டனை   2026 ஏப்ரல் 15 அன்று நீதிமன்றம் வழங்கியுள்ளது. அவர் தீர்ப்பை எந்த உணர்ச்சி வெளிப்பாடும் இல்லாமல் ஏற்றுக்கொண்டார்.கொலை நடந்த விதம் — நீதிமன்றத்தில் விவரிக்கப்பட்டது. தாய்க்கு 13 கத்திக்குத்துக்கள், மகளிற்கு 31 கத்திக்குத்துக்கள் .

தாய் தூக்கத்தில் இருந்தபோது தாக்கப்பட்டிருக்கலாம, மகள் தன்னை காப்பாற்ற முயன்றும் முடியாமல் போயிருந்தது. நீதிபதி இதை ‘அருவருப்பான கொடூரம்’ என விவரித்தார் இந்த விவரங்கள் நீதிமன்றத்தில் மீண்டும் சொல்லப்பட்டபோது, அந்த விசாரணை அறை முழுவதும் அதிர்ச்சியில் மூழ்கியது சட்டநடவடிக்கையின் அடுத்த கட்டம் குற்றவாளியின் வழக்கறிஞர் மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளார். எனவே, வழக்கு இன்னும் முடிவடையவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வழக்கறிஞர் Me Caty Richard, இந்த தீர்ப்பு ஒரு முக்கிய கட்டமாக இருந்தாலும், நீதி பெறும் பயணம் இன்னும் தொடரும் என்று கூறினார்.