இஸ்ரேலிய பயங்கரவாதத்தை நிறுத்தக்கோரி கொழும்பில் போராட்டம்

பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி இஸ்ரேலுக்கு எதிராக இன்றைய தினம் கொழும்பு 7 தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு முன்னால் அமைதிப் போராட்டம் ஒன்று நடைபெற்றது. இதன் போது பல இஸ்லாமிய அமைப்புக்களும் பொதுமக்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். மேலும், இன்றைய வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் இந்த அமைதி போராட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது…