ஹம்தி குழந்தையின் மரணத்திற்கு நீதி வழங்குங்கள்!
கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்பாக அமைதிப் போராட்டம்...
கடந்த 2021 ஆம் ஆண்டு வைத்தியசாலையில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூன்றரை வயது நிரம்பிய சிறுவன் பஸ்லி ஹம்தியின் சீறுநீரகம் திருடப்பட்ட சம்பவத்திற்கு நியாயம் கோறி இன்றைய தினம் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்பாக மௌனப் போராட்டம் ஒன்று இடம் பெற்றது.
சிறுவனின் உறவுகள்,மற்றும் அப்பகுதி பெற்றோர்கள் இன்று காலை நீதிமன்ற செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கு முன்பாக அளுத்கடை நீதிமன்றத்திற்கு முன்பாக பதாகைகளை ஏந்தி அமைதியாக முறையில் கவனயீர்ப்பு பேராட்டத்தை நடத்தினர்.
சிறுவன் ஹம்தி கொழும்பு பிரதேசத்தினை சேர்ந்தவர்.2012 ஆம் ஆண்டு சிறுவனுக்கு ஏற்பட்ட சிறுநீரக நோய் காரணமாக வைத்தியரிடம் அவரை பெற்றோர்கள் கொண்டு சென்றுள்ளனர்.
வைத்திய பரிசோதனையினை மேற்கொண்ட வைத்தியர் சிறுவனுக்கு இடது புற சிறுநீரகம் பழுதடைந்துள்ளதாகவும், சிகிச்சை செய்வதற்கு காத்திருப்பு பட்டியலில் உள்வாங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளனர்.
பின்னர் அதே பெற்றோர்களுக்கு வைத்தியசாலையில் இருந்து தகவல் சொல்லப்பட்டது, உடனடியாக சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் வைத்தியசாலையினால் முன்னெடுக்கப்படவுள்ளதாக, இதற்கு அமைய அறுவை சிகிச்சையும் முடிவுற்றது.
சிகிச்சையின் பின்னர் இயந்திரத்தின் உதவியுடன் சிறுவன் வைத்தியசாலையில் இருந்த போது, தீடீரென சிறுவனின் உடல் பருமன் அதிகரிக்க ஆரம்பித்தன.
இதனை அவதானித்த வைத்தியர்கள் உடனடியாக சிறுவனை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய போது அதிர்ச்சி காத்திருந்தது. அது இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டனர். இந்த சம்பவம் பெறும் பரபரப்பை தோற்றுவித்த நிலையில் இந்த சிறுவனின் அறுவை சிகிச்சையின் செய்த வைத்தியர் நாட்டைவிட்டு வெளியேறியதாக தகவல் வந்தது.
இந்த நிலையில் இன்றைய தினம் மேற்படி வழக்கு விசாரணையின் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்த போதும், இன்றைய தினம் அந்த தீர்ப்பு நீதிமன்றினால் அறிவிக்கப்படாத நிலையில் மீண்டும் இம்மாதம் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.