வெடிகுண்டு மிரட்டல்: திரும்பியது எயர் இந்தியா விமானம்.

விமானத்தில் வெடிகுண்டுவைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த செய்தியை தொடர்ந்து மும்பாயிலிருந்து நியுயோர்க்கிற்கு பயணித்துக்கொண்டிருந்த எயர் இந்தியா விமானம் புதுடில்லி விமானநிலையத்திற்கு திருப்பப்பட்டுள்ளதாக  இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானநிலையம் தற்போது புதுடில்லி இந்திராகாந்தி விமானநிலையத்தில் நிற்பதாகவும் சகல பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.