லண்டன் ஹாரோ பகுதியில் உள்ள கடை ஒன்றில் சிறுமியை அடைத்து வைத்த தமிழர் ஒருவர் கைது.

லண்டன் ஹாரோ பகுதியில் உள்ள கடை ஒன்றில் சிறுமியை அடைத்து வைத்த தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பான வழக்கு ஹாரோ கிரவுன் நீதிமன்றத்தில் அண்மையில் இடம்பெற்றது. Greenford பகுதியில் உள்ள Hurley வீதியைச் சேர்ந்த வைத்திலிங்கம் பூவேந்திரநாதன் என்பவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி இரவு 9 மணிக்கு> பின்னரின் Uxbridge வீதியில் உள்ள Star News and Wine கடைக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.ஒரு பெண் கடையில் அடைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், 14 வயது சிறுமி காயமின்றி இருப்பதை கண்டுபிடித்தனர்.

ஆனால் அவர் சுமார் 10 நிமிடங்களுக்கு கடையில் அடைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டதுஇஇந்த சம்பவம் தொடர்பாக 59 வயதான பூவேந்திரநாதன் என்பவரை பொலிஸார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். அவருக்கு டிசம்பர் 18 ம் திகதி நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.