டில்லியில் பிரதமர் மோடியை  முதல்வர் ஸ்டாலின் சந்தித்து முக்கிய கோரிக்கைள முன்வைத்தார்

டில்லியில் பிரதமர் மோடியை இன்று முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். அவர் தமிழகத்திற்கு நிதி வழங்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை மனு அளித்தார். தமிழகத்திற்கு, மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்க வேண்டும்.

மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, பிரதமரை சந்தித்து வலியுறுத்துவதற்காக, முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து, விமானத்தில், டில்லி புறப்பட்டு சென்றார். முதல்வருடன், அரசின் தலைமை செயலர் முருகானந்தம், முதல்வரின் உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் உடன் சென்றனர்.

இந்நிலையில் இன்று பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். அப்போது அவர் தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள நிதி, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான 2ம் கட்ட நிதி, பள்ளிக்கல்வி சமக்ர சிக்சா திட்டத்துக்கு நிதி உள்ளிட்டவற்றை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி அதற்கான கோரிக்கை மனு அளித்தார்.