கொழும்பில் மூடப்பட்டிருந்த முக்கிய வீதிகள் திறக்கப்பட்டன.

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள மாண்புமிகு பரோன் ஜயதிலக மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தை வீதிகளை இன்று (27) முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் உத்தரவுக்கமைய இந்த வீதிகள் திறக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.