இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடாது ஆக்கபூhவமாக பயணிக்க தயார்: சீனா அறிவிப்பு

 


இலங்கையின் நிலையான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில், நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாத கொள்கைகளை கடைப்பிடித்து, அதன் இறையாண்மைக்கு மதிப்பளித்து, ஆக்கப்பூர்வமான பங்கை ஆற்றுவதற்கு சீனா தயாராக இருக்கிறது என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க தேர்வானமை குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் சுமூகமான முறையில் நடைபெற்றதாகவும் இலங்கையின் நட்பு அண்டை நாடான சீனாவும், இலங்கையும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பரஸ்பர மரியாதை மற்றும் ஆதரவுடன் நடந்துகொண்டதாகவும் அவர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிப் பிரமாணம் செய்து கொண்ட திசாநாயக்காவுக்கு சீனா தனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது. ஜனாதிபதியும் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். சமாதான சகவாழ்வின் ஐந்து கோட்பாடுகளின் உணர்வை நிலைநிறுத்துவதற்கும், இரு நாடுகளுக்கிடையிலான பாரம்பரிய நட்பை முன்னெடுத்துச் செல்வதற்கும்இ எமது அபிவிருத்தி உத்திகளுக்கு இடையில் அதிக ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்கும், உயர்தர பெல்ட் மற்றும் வீதியை ஆழப்படுத்துவதற்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் அவரது புதிய நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம்’ என்றார். மேலும், ஒத்துழைப்பு, மற்றும் நேர்மையான பரஸ்பர உதவி மற்றும் நிரந்தர நட்பு அடிப்படையில் எங்கள் மூலோபாய கூட்டுறவு கூட்டாண்மையில் புதிய முன்னேற்றத்திற்காக பாடுபபடுமாறும் அவர் கூறினார்.