நாடாளுமன்றம் இன்று இரவு கலைக்கப்படலாம்-புதிய பிரதமர் அறிவிப்பு!

நாடாளுமன்றம் இன்று பெரும்பாலும் கலைக்கப்படும் என்று பிரதமர்  ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியை ஏற்றதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

அதன்படி இன்று பிரதமராக பதவியேற்றுக் கொண்டதுடன் கடமைகளை பொறுப்பேற்க வேண்டியுள்ளது. பின்னர் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.