பிரதமர் தினேஷ் குணவர்தன பதவி விலகினார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதன்படி, தனது பதவி விலகல் கடிதத்தை  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதன் காரணமாக பதவியை இராஜினாமா செய்வதாகவும், புதிய அமைச்சரவையை நியமிப்பதற்கான சூழலை உருவாக்குவதாகவும் தினேஷ் குணவர்தன தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்பின் 47 (2) பிரிவின் பிரகாரம் தனது பதவியை இராஜினாமா செய்வதாக தினேஷ் குணவர்தன குறித்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.