ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்கும்-சஜித்

Screenshot

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவுக்கு தேவைப்படும்போது ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்கும் என்று அந்தக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் இரவு தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்ற  ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ இறுதி முடிவை அறிவிக்கும் விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய அநுரகுமார திஸநாயக்கவை நான் வாழ்த்துகிறேன்.

நாட்டைப்பலப்படுத்தவும் நெருக்கடியிலிருந்து மீட்பதற்கும் அவருக்கு பலம் இருப்பதாக நான் நம்புகிறேன்.

‘தற்போதைய நெருக்கடியிலிருந்து நாட்டை முன்னேற்றுவதற்கு ஆதரவை வழங்குவது அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களின் கடமையாகும் எனவும் தெரிவித்தார்.