துயர் தோய்ந்த நவாலிப்படுகொலைகள் நூல் வெளியீடு.- லண்டனில்

1995 யூலை 09 ம் திகதி சிறிலங்கா வான்படை படையினரின் குண்டுவீச்சில் படுகொலை செய்யப்பட்ட 153 தமிழ் அப்பாவிப்பொதுமக்களை கொலை செய்ததன் ஊடக அப்போதைய சந்திரிக்கா மிகப்பெரும் இனப்படுகொலையை நிறைவேற்றியிருந்தது.

இந்த படுகொலையை ஆவணமாக்கும் முயற்சியில் ஈழத்தின் மிகப்பெரும் எழுத்தாளர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்பட்ட வல்வை ஆனந்தராஜ் அவர்களால் எழுதப்பட்ட “துயரம் தோய்ந்த நவாலிப்படுகொலைகள் எனும் வரலாற்று ஆவணநூல் லண்டன் குறைடன் பகுதியில் உள்ள கேட்போர் கூடம் ஒன்றில் ஊடகவியலாளர் தம்பையா தயாபரன் அவர்களின் தலைமையில் மிகச்சிறப்பாக 19-09-2024 அன்று நடைபெற்றது.

வரவேற்புரையை பொறியியலாளர் திரு சி. சிவலீலன் அவர்கள் வழங்க தலைமையுரையை திரு தம்பையா தயாபரன் அவர்கள் நிகழ்த்தினார் . தொடர்ந்து நூலின் அறிமுக உரையை ஆசிரியர் கந்தையா பாலகிருஸ்ணன் அவர்கள் வழங்கினார் . வெளியீட்டு உரையை திருமகாலிங்கம் சுதாகரன் அவர்கள் நிகழ்த்தினார் .

தொடர்ந்து கருத்துரைகளை அருட்தந்தை ஜெபநேசன் அவர்களும், சிவசிறிராம் வாகீசக்குருக்கள் அவர்களும், அரசியல் இராணுவ ஆய்வாளர் கலாநிதி பிரபாகரன் அவர்களும் , வைத்திய கலாநிதி திருமதி இந்துமதி அவர்களும் வழங்கினார்கள் .

இறுதியாக நூலின் ஏற்புரையை ஒய்வுபெற்ற கல்விப்பணிப்பணிப்பாளரும் நூலாசிரியருமான வல்வை ஆனந்தராஜ் அவர்கள் வழங்கினார் . இந்த நிகழ்வில் பெருமளவான தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் , மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .