கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவராக நான் போட்டியிடுவேன்-முன்னாள் அமைச்சர் ரொம் ருகென்தாட்

கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவராக போட்டியிட உள்ளதாக முன்னாள் அமைச்சர் ரொம் ருகென்தாட் அறிவித்துள்ளார். அடுத்த கன்சர்வேடிவ் தலைவராக போட்டியிடுவது மட்டுமல்ல அடுத்த கன்சர்வேடிவ் பிரதம மந்திரி’ ஆகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

முன்னாள் உள்துறைச் செயலர் ஜேம்ஸ் க்ளெவர்லியின் அறிவிப்பைத் தொடர்ந்து, ரிஷி சுனக் கட்சித் தலைவராகப் போட்டியிட்ட இரண்டாவது டோரி எம்.பி ருகெந்தட் ஆவார்.ஜூலை 4ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் கட்சி இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான தோல்வியைச் சந்தித்த சிறிது நேரத்திலேயே சுனக் தனது ராஜினாமாவை அறிவித்தார். மாற்றுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் அந்தபதவியில் இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.