பல கோடிகளை விட்டுட்டு விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார்-புஸ்ஸி ஆனந்த்

தமிழக வெற்றி கழகத்தின் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளரும் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவருமான பரணி பாலாஜி என்பவரின் இல்ல மஞ்சள் நீராட்டு விழாவிற்கு வருகை தந்த தவெக கட்சி மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், அங்கிருந்த மக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அங்கு அவர் பேசுகையில், “5000, 10,000 ஆயிரம் கோடிகளை விட்டுவிட்டு ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைப்பது பல மொழி, ஆனால் பல கொடிகளை விட்டுவிட்டு மக்களுக்காக சேவை செய்ய அரசியலில் வந்துருக்கிறார்.

எல்லாருக்கும் ஒரு நாள் மட்டும் தான் பிறந்தநாள் வரும் அதை ஒரு வாரம், பத்து நாள் கொண்டாடுவாங்க, ஆனால் தளபதியின் பிறந்தநாளை மட்டும் தான் வருடம் 365 நாளும் கொண்டாடுகிறோம். ஒரு வருடம் அல்லது இரண்டு வருடமாக நலத்திட்ட உதவிகள் செய்யவில்லை.

30 வருடமாக ஏழைகளுக்கு தேவையான உதவிகளை செய்துக்கொண்டிருக்கும் கட்சி தமிழக வெற்றி கழகம். தளபதி என்று சொன்னாலே நமக்கு எனர்ஜி கிடைக்கும். அந்த தளபதியை 2026-ல் தமிழ்நாட்டின் முதல்வராக அமர வைக்க வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டார்.