இலங்கையில் நிதி மோசடியில் ஈடுபட்ட 60 இந்தியப் பிரஜைகள் கைது

இலங்கையில் நிதி மோசடியில் ஈடுபட்ட 60 இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தலங்கம, மாத்திவெல மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் இணையத்தின் மூலம் மோசடியில் ஈடுபட்ட நிலையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட போது, ​​135 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 57 மடிக்கணினிகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.