சஜித் – சுமந்தினுக்கு இடையிலான டீல்: வெளிப்படுத்தினார் சட்டத்தரணி சிறிகாந்தா

எதிர்வரும் ஜனாதி பதி தேர்தலில் சஜித் தரப்பை ஆதரிப்பதில் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் அணி தீர்மானித்து விட்டது. இது நன்கு திட்டமிட்ட சுமந்திரனின் நடவடிக்கையாகும். இதற்காகவே தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சி தீர்மானம் எடுக்க முடியாது திணறுகின்றது.

இன்று தமிழரசுக் கட்சி செங்குத்தான பிளவை நோக்கி பயணிக்கின்றது. சஜித் தரப்புடன் சுமந்திரன் இரகசிய டீல் ஏற்படுத்தி தன் அணி சார்ந்தவர்களுடன் தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார் என தமிழ் தேசியக் கட்சியின் தலைவரும் மூத்த சட்டத்தரணியுமான சிறீகாந்தா தெரிவித்துள்ளார். இந்த முடிவை அறிவிக்க மிகத் தந்திரமாக சுமந்திரன் தரப்பு காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றது என்று சட்டத்தரணி சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.