மன்னாரின் தேசிய மென்பந்து வீராங்கனை சயந்தினி

மன்னார் நிருபர் அ. ராயூகரன்

மன்னார் பேசாலை கிராமத்தில் ஐந்து சகோதர சகோதரிகளை கொண்ட வறுமைப்பட்ட குடும்பத்தில் 2003 பிறந்த சயந்தினி, ஆரம்ப கல்வியினை பேசாலை சென்மேரிஸ்சில் கற்று, தரம் 6 தொடக்கம் பத்திமா தேசிய பாடசாலை பேசாலையில் கற்று வந்திருக்கின்றார்.

இவர் தரம் எட்டில் இருந்து மென்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி ஈடுபட்டு விளையாடி வந்த நிலையில் இவரை இணங்கண்டு பயிற்று வித்து தற்போது நான்கு மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகளில் பங்கு பற்றி தேசிய ரீதியில் பங்குபற்ற ஆவலோடு விளையாடி வருகின்றார்.