தனியார்மயப்படுத்தலுக்கு எதிராக கொழும்பில் இன்று  மாபெரும் ஆர்ப்பாட்டம்

நாட்டின் வளங்கள் விற்பனை செய்யப்படுதல் மற்றும் தனியார்மயப்படுத்தலுக்கு எதிராக கொழும்பில்  இன்று  மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டமானது, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக நடாத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தபால் ஊழியர் சங்கம், தொடருந்து ஊழியர் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கத்தினை சேர்ந்தோர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.