சர்வ ஜன பலய’ என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி ஆரம்பம்

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ‘சர்வ ஜன பலய’ என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி இன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கை அரசியலில் தீவிரமாகவும் சிங்கள பௌத்தத்தை மையமாவும் கொண்ட பிரபல அரசியல்வாதிகளை அடிப்படையாகக் கொண்டே இப் புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டிருக்கிறது.

பிவித்துறு ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, மவ்பிம ஜனதா கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மேலும் சில அரசியல் கட்சிகள் இந்த கூட்டணியுடன் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, ரொஷான் ரணசிங்க, உதய கம்மம்பில மற்றும் தொழிலதிபர் திலித் ஜயவீர உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். மேலும், குறித்த கட்சியின் உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.