குஜராத்-ராஜ்கோட் வணிக வளாகத்தில் தீ விபத்து – 20 பேர் பலி

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள டிஆர்பி வணிக வளாகத்தில் இன்று சனிக்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. வணிக வளாகத்தில் குழந்தைகள், பெரியவர்கள் விளையாடுவதற்காக உள்ள பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. ராஜ்கோட் காவல்துறை ஆணையர் இதுவரை 20 பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ளார்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

தீவிபத்து நேரிட்ட மாலில் இருந்து வெளிவரும் புகையை 5 கிலோமீட்டர் தொலைவில் இருந்து பார்க்கும் அளவுக்கு தீ மிகக் கடுமையாக இருந்தது. அங்கே மேலும் பலர் சிக்கியிருப்பதாக  தெரிவிக்கப்படுகிறது

வணிக வளாகத்தில் உள்ள கேம் மண்டலத்தில் வெல்டிங் வேலை நடந்து கொண்டிருந்ததாகவும், ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது