அதிவேக நெடுஞ்சாலை சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்!

மோசமான வானிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் வாகனம் செலுத்தும் போது மின்னணு பலகைகளில் உள்ள எச்சரிக்கைகளை கவனத்தில் கொள்ளுமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது. வாகனங்களுக்கு இடையில் 50 மீற்றர் இடைவெளியை பேணுமாறும், மின்னணு பலகைகள் அறிவுறுத்தியுள்ள வேகத்தை மீறக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.