பிரித்தானியாவில் 15 வயதுக்குட்பட்டவர்கள் புகைப்பிடிப்பதை தடுக்கும் சட்டம்.

15 வயதுக்குட்பட்டவர்கள் புகைப்பிடிப்பதை தடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டமூலம் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளார். இந்தச் சட்டமூலம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அந்நாட்டு பாராளுமன்றில் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.

பிரதமர் சுனக் கடந்த ஆண்டு இந்தச் சட்டமூலத்தை முன்மொழிந்தார்.இதன்மூலம் 2009 ஜனவரி முதலாம் திகதிக்கு பின்னர் பிறந்த எவருக்கும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது குற்றமாகக் கருதப்படுகின்றது.எதிர்காலத்தில் புகைப்பிடிக்கும் பழக்கம் அற்ற சிறந்த தலைமுறையை உருவாக்கும் நோக்கில் பிரதமர் ரிஷி சுனக் இந்த சட்டமூலத்தை கொண்டுவந்துள்ளார்.

பாராளுமன்றத்தில் குறித்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சியின் ஆதரவு இருப்பதால், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் உறுப்பினர்கள் சட்டமூலம் மீது சுதந்திரமாக வாக்களிக்க முடியும். அதேபோல், சட்டமூலத்துக்கு எதிராக எந்த டோரிகளின் வாக்குகளும் பிரதமருக்கு எதிரான முழுமையான கிளர்ச்சியாக கருதப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், முன்னாள் பிரதமர்களான லிஸ் ட்ரஸ் மற்றும் போரிஸ் ஜோன்சன் ஆகியோர், டோரிகளின் மிகவும் குரல் கொடுக்கும் குழுவை வழிநடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிக்க திட்டமிட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.