இலங்கை வந்தடைந்தனர் முருகன், பயஸ், ஜெயக்குமார்-விமானநிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை.

ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு   33 ஆண்டுகள் வரை சிறையிலிருந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இன்று காலை இலங்கையை  வந்தடைந்துள்ளனர்.

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னைக்கு காவல்துறை வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

இதன்படி,  இன்று(03)  முற்பகல் 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர்கள் இலங்கை நோக்கி பயணித்தனர்.

மூவரும் காலை 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை மூவரையும் கொழும் விமானநிலையத்தில் அதிகாரிகள் தடுத்துவைத்து விசாரணை செய்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.