பாலியல் உறவுக்கான வயதைக் குறைக்கும் சட்டமூலம் வாபஸ்

பாலியல் உறவுக்கான வயது வரம்பை 14 ஆகக் குறைக்கும் தண்டனைச் சட்டம் திருத்த சட்டமூலத்தை அரசாங்கம் இன்று வாபஸ் பெற்றது. சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெறுவதாக பாராளுமன்றத்தில் தெரிவித்த நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ஆர்வமுள்ள சகல தரப்பினருக்கும் இணங்கக்கூடிய திருத்தம் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஐந்தாண்டுகள் படித்து முடித்த மூத்த ஜனாதிபதி சட்டத்தரணிகள், இதர சட்டத்தரணிகள் மற்றும் தொழில் வல்லுனர்களால் இந்த சட்டமூலம் மீதான பரிந்துரை நீதி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார். காதல் உறவின் சம்மதத்தின் பேரில் பாலுறவு கொண்ட காதலர்கள் எதிர்கொள்ள வேண்டிய நடைமுறை சிக்கல் காரணமாக இந்த திருத்தம் முன்மொழியப்பட்டதாக அவர் கூறினார்.

பொதுவாக 14 முதல் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் 16 முதல் 22 வயதுடைய சிறுவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விஷயங்களில் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இவ்வாறான வழக்குகள் மஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது, சிறுமி முதிர்ச்சியடைந்துவிட்டாள், அவர்களில் சிலர் ஏற்கனவே அந்த இளைஞனை திருமணம் செய்து கொண்டனர். இவ்வாறான நிலையில் தற்போதைய சட்டத்தின்படி சிறுவனுக்கு கட்டாயமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும். இதனால் பெண், இளைஞன் இருவரது வாழ்க்கையும் சீரழிகிறதுஇ” என்றார்.