அனுரவை விவாதத்திஅழைக்கும்  ஐக்கிய மக்கள் சக்தி.

நாட்டுக்காக முன்வைக்கப்பட்ட பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பில் விவாதத்திற்கு வருமாறு தேசிய மக்கள் கட்சியின் தலைவர்களுக்கு சவால் விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட சபை உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், ஏழாவது தடவையாக இந்த சவாலை முன்வைப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் தேசிய மக்கள் சக்தி தனது சவாலை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார். தம்மை விவாதத்திற்கு அழைத்த போது, அனுர திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பரிவாரங்கள் மறைந்திருந்ததாகவும், அப்படியானால், இவ்வாறானதொரு பகிரங்கச் சபைக்கு முகம் கொடுக்க முடியாது என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்ததாலேயே இவ்வாறு செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.