கனடாவில் அனுரகுமார திசநாயக்கவிற்கு வலுக்கும் ஆதரவு


தேசிய மக்கள் சக்தியின் தலைவரான அனுர குமார திசாநாயக்க கனடாவிற்கான  விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இன்று பயணமாகிறார். கனடாவாழ் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடுவதற்காக தேசிய மக்கள் சக்தியின் கனேடிய குழுவினால் பிரதானமான இரு மக்கள் சந்திப்புக்களின் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதில் முதலாவது சந்திப்பு எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு கனடாவின் டொரண்டோ நகரில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சந்திப்பானது, எதிர்வரும் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு வான்கூவர் நகரில் நடைபெறவுள்ளது.மேலும்,  அவர் கனடாவில் வாழும் இலங்கைத் தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களுடன் சகோதரத்துவ சந்திப்புகளிலும் ஈடுபட போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவிற்கு கனடாவில் ஆதரவு அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் அனுரகுமார திசாநாயக்கவை வரவேற்கும் விதத்தில் புலம்பெயர் இளைஞர் ஒருவர் ‘”Anura March 23 Toranto”‘ என்ற பதாகையுடன் நிற்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.