நானுஓயாவில் ஹெரோயினுடன் ஒருவர் கைது.

 

நானுஓயா நிருபர் செ.திவாகரன்

நானுஓயா பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் நானுஓயா பகுதிக்கு ஹோரோயின் போதை பொருள் கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியா இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய நானுஓயா பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் நானுஓயா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (10) திடீர் சோதனை நடவடிக்கையின் போது புகையிரதத்தில் வியாபாரம் செய்யும் ஒருவரிடம் மிகவும் சூட்சமான முறையில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட போதை பொருள் 410 மில்லிகிராம் நிறையுடையது எனவும் சந்தேகநபர் ஈசி கேஸ் முறையில் போதை பொருள் விநியோகிப்பவர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது அத்துடன் குறித்த சந்தேக நபர் மாவத்தகம பகுதியை சேர்ந்தவர் எனவும் 34 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் திங்கட்கிழமை (11) ஆஜர்படுத்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.