சட்டவிதிமுறைகளுக்கமைய முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்பட வேண்டும் -சமன்ஸ்ரீ ரத்நாயக்க.

தேர்தல் சட்டவிதிமுறைகளுக்கமைய இந்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே  சமன்ஸ்ரீ ரத்நாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் சட்டவிதிமுறைகளுக்கமைய இந்த ஆண்டில் ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழு அதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளது.

நாட்டின் சட்டத்திற்கு அமைய செயற்படுவதாக இருந்தால் நிச்சயமாக தேர்தலை நடத்த வேண்டும்.

அதேபோல் எந்தவொரு நேரத்திலும் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது  என அவர்  தெரிவித்துள்ளார்.