ராகுல் காந்தி நடைபயணத்தை குழப்பிய பாஜக.

மத்திய பிரதேச மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு இருக்கும் ராகுல் காந்தி ஷாஜாபூர் நகரில் நடைபயணம் மேற்கொண்ட போது பா.ஜ.க. தரப்பினரால் சிறிது நேரம் குழப்பம் விளைவிக்கப்பட்டது.

ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்ட பகுதியில் ஒன்றுகூடிய பா.ஜ.க. ஆதரவாளர்கள் ‘மோடி-மோடி’ என கோஷமிட்டனர்.இதன்போது நடைபயணத்தை நிறுத்திய ராகுல் காந்தி, கோஷம் எழுப்பியவர்களுக்கு காற்றில் முத்தங்கள் கொடுத்திருந்தார். இதேவேளை ராகுல் காந்தி, குழப்பம் விளைவித்தவர்களுடன் கைகுலுக்கி, பேச முற்பட்டார் .அதன்போது அவர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிட்டனர். சிறிது நேரம் அங்கிருந்த ராகுல் காந்தி தமது பயணத்தை மீண்டும் தொடங்கியிருந்தார்.