துப்பாக்கிச்சூடு -பொது சுகாதார பரிசோதகர் பலி.

எல்பிட்டிய, பத்திராஜா மாவத்தையில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் அவரது வீட்டில் வைத்து துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பொது சுகாதார பரிசோதகருக்கு 51 வயதாகும்.

அவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவரால் இந்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்