மோதர துப்பாக்கிச் சூடு-சந்தேகநபர்கள் பயன்படுத்திய கார் கண்டுபிடிப்பு .

மோதர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் வந்த சந்தேகத்திற்குரிய காரை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த கார் இன்று (14) பிற்பகல் ஏகல பகுதியில் தனித்து விடப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த காரில் துப்பாக்கி குண்டு ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

காரின் சேஸ் நம்பர் மற்றும் என்ஜின் எண் ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காருக்கு போலி இலக்கத் தகட்டை பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்த வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோதரையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த உணவகத்தின் முகாமையாளர்  கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.