மன்னார்-13 வயது சிறுமி தற்கொலை .

மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர்  இன்று திங்கட்கிழமை (12) அதிகாலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார்.

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில், எருக்கலம்பிட்டி 1ஆம் வட்டார பகுதியைச் சேர்ந்த சிறுமி காணாமல் போன நிலையில், சிறுமியின் பெற்றோர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

வவுனியாவில் உள்ள சிறுவர் நிலையமொன்றுக்கு இந்த சிறுமி சென்றிருந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) அங்கிருந்து மீட்கப்பட்டு, அவரது வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அதன் பின்னரே, சிறுமி உயிரிழந்த துயரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த சிறுமி, கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தில் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சிறுமியின் சடலம் மன்னார் பொலிஸாரால்  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில்  ஒப்படைக்கப்பட்டு, வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.