சனத் நிஷாந்தவின் விபத்து-கொள்கலன் சாரதியிடம் சிஐடி விசாரணை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த காருடன் மோதி விபத்துக்குள்ளான கொள்கலன் வாகன சாரதி இன்று திங்கட்கிழமை (12) குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலமளித்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரியின் மரணம் குறித்தே  அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

குறித்த சாரதி சுமார் 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்ற விதம் சந்தேகத்துக்குரியதாக இருப்பதால், விபத்து குறித்து முறையான விசாரணை நடத்துமாறு கோரி நிஷாந்தவின் மனைவி திருமதி சாமரி பிரியங்கா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.