பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தாயார் இன்று காலமானார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனின் தாயாரான அமிர்தநாதன் செபமாலை இன்று(05) தனது 84 ஆவது வயதில் காலமானார்.

1940 ஆம் ஆண்டு மன்னார் விடத்தல் தீவில் பிறந்த அமிர்தநாதன் செபமாலை, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை காலமானார்.

அன்னாரின் பூதவுடல் மன்னார் தோட்டவெளி கிராமத்திலுள்ள வீட்டில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரது இறுதி கிரிகைகள் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளதுடன் விடத்தல் தீவு –  சேமக்காலையில்   பூதவுடல் நல்லடக்கம் செய்யப்யப்படவுள்ளது.