சாந்தனை விடுவிக்க கோரி  தமிழரசுக்கட்சி தலைவர் சிவஞானம் சிறீதரன் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம்.

கல்லீரல் செயலிழப்பால் உயிருக்காக போராடிவரும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள சாந்தனை விடுவிக்க கோரி பலதரப்புக்களும் குரல் எழுப்ப தொடங்கியுள்ளன.

32 வருட சிறைத் தண்டனையின் பின்னர், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதிஇ இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், ரொபேட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரும் தொடர்ந்தும் விசேட இடைத்தங்கல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும், இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு,  தமிழரசுக்கட்சி தலைவர் சிவஞானம் சிறீதரன், கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அத்துடன் சாந்தனின் தாயாரால், தனக்கு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைக் கடிதத்தின் விடயங்களையும் சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார். ஈழத்தமிழர்கள் விடயத்தில் அதீத கரிசனை கொண்டிருக்கும் தாங்கள், விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுக கோருகின்றேன். நோய்வாய்ப்பட்டிருக்கும் சாந்தனின் உடல் நிலை கருதியும், அவரது குடும்பத்தின் உணர்வு நிலைப்பட்ட எதிர்பார்ப்பைக் கருத்திற்கொண்டும், சாந்தன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்கு அனுப்பி வைக்க ஆவண செய்யுமாறு, தங்களைத் தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன் என சிவஞானம் சிறீதரன் தனது கடிதத்தில்டி குறிப்பிட்டுள்ளார்.