12 வயது சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம்-இருவர் கைது.

கடலுக்குள் இழுத்துச் சென்று 12 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம்  செய்த இளைஞனும் அதற்கு உதவிய 16 வயது சிறுவனும் அங்குலான பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்கரையில் இருந்தபோது சந்தேக நபர்கள் இருவரும் தன்னை தண்ணீருக்குள் இழுத்து பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுவன் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

அந்த இளைஞன் தன்னை துஷ்பிரயோகம் செய்த போது மற்றைய சிறுவன் அதை பார்த்து ரசித்ததாக பாதிக்கப்பட்ட சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.