இலங்கை கிரிக்கெட் மீதான ஐ.சி.சி தடை நீக்கம்.

இலங்கை மீதான சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) இடைநிறுத்தம் சற்று முன் நீக்கப்பட்டது என  இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ  தெரிவித்தார்.

இலங்கை மீதான சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) இடைநிறுத்தம் பல காலமாக நடைமுறையில் இருந்த விடயம் யாவரும் அறிந்ததே. இத்தடை வெகு விரைவில் நீக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் முன்னர் அறிவித்திருந்த  நிலையில், சற்று முன்னர் இத்தடையானது நீக்கப்பட்டதாக இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ  தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம்(27) வத்தளையில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய போது விளையாட்டுத்துறை அமைச்சர் இலங்கை மீதான சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) இடைநிறுத்தம்  வெகுவிரைவில் நீக்கப்படும் என  தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) ஆனது சற்று முன் இலங்கை கிரிக்கெட் மீதான தடையை நீக்கியுள்ளது. இதனால்  கிரிக்கட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.