திருகோணமலைக்கு சுற்றுலா சென்ற வேன் விபத்து : 8 பேர் படுகாயம்

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தங்கநகர் பகுதியில் வெள்ளிக்கிழமை (26) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்..

அவிசாவளையிலிருந்து திருகோணமலைக்கு வேனில் சுற்றுலா சென்றவர்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு அதே வேனில் திரும்பிச் சென்றுக்கொண்டிருந்த போது, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக லொறியின் பின்புறத்தில் குறித்த வேன் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது வேனில் பயணித்த அவிசாவளையைச் சேர்ந்த வேன் சாரதி உட்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக லொறியின் உதவியாளர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.